Logo of Tirunelveli Today
English

மண் மணம் மாறா பாரம்பரிய உணவுகள்

திருநெல்வேலினு சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அல்வா.
அல்வா மட்டும் இல்லைங்க! இங்க சொதி குழம்பு சாப்பாடு, கூட்டாஞ்சோறு, உளுந்தம்பருப்பு சோறு இன்னும் நிறைய மண் மணம் மாறாத உணவு வகைகள் இருக்கு. அதுபற்றிய தகவல்களை இங்கு நாம் காணலாம்.

நெல்லை பிரபல உணவு வகைகள்

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்

சூடான வெள்ளை சாதத்தை சிறு மலை போல வாழை இலையில் பரப்பி, நடுவில் குழி பறித்து நீச்சல்குளம் போல அதில் சொதி குழம்பை ஊற்றி சாப்பிடும் ரசனை மிக்கவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்!
பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
  • சப்பாத்தியை தயார் செய்து சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் அது நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்.
  • சேனைகிழங்கை சீக்கிரம் வேக வைப்பதற்கு, வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
  • உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • தயிர் அதிகம் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைக்கலாம்.
  • கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.
  • இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் தலை கீழாக மாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், பளககமலம இரககம.
  • இட்லி மாவு மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும் போது சிறிது வெண்டக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கலாம்.
  • குக்கரில் சாதம் வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
  • பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் போது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக உதிரி உதிரியாக வெந்து வரும்.
  • சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும்.
அறுசுவை நெல்லை உணவுகள்
  • புளியில்லா குழம்பு - சுட்ட அப்பளம்
  • முழு உளுந்து தோசை - பச்சை மிளகாய் துவையல்
  • சொதி குழம்பு - இஞ்சி பச்சடி
  • கூட்டாஞ்சோறு - தயிர் பச்சடி
  • உளுந்தம் பருப்பு சோறு - எள்ளு துவையல்
  • இடியாப்பம் - சொதி
  • இட்லி - கத்திரிக்காய் கிச்சடி
  • இடிசாம்பார் - அவியல்
  • புலித்தண்ணி - வறுத்த பருப்பு துவயல்
  • குருணை அரிசி உப்புமா - மோர் குழம்பு
  • அப்பம் - தேங்காய்ப்பால்
  • அடை தோசை - அவியல்

தற்போதைய பதிவுகள்

உங்களுக்குப் பிடித்தமான திருநெல்வேலி இனிப்புகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகாரங்கள் ஆகியவற்றை பற்றிய செய்முறை குறிப்புகள் பற்றி இங்கு காணலாம். இந்த உணவுகளை நீங்களே செய்யவும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் எங்கள் தற்போதைய பதிவுகளை தவறாமல் படியுங்கள்!

நெல்லை சமையல் குறிப்புகள்

கும்மியானம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடி மாதம் கடைசி தினம் அன்று முன்னோர்களை வணங்கும் வகையில் ஆடி இறுதி வழிபாடு செய்யப்படும். இந்த நாளில் பிரசாதமாக படைக்க கும்மியானம் பிரத்யேகமாக செய்யப்படும். இந்த கும்மியானத்தில் பல தானியங்கள் மற்றும் கருப்பட்டி சேர்ந்துள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவாக விளங்குகிறது. இப்போது நாம் அந்த கும்மியானம் செய்யும் முறை பற்றி இங்கு காணலாம். தேவையான பொருட்கள்: பாசி பயறு - 1 கப். கொண்டைக்கடலை - 1 கப். […]
மேலும் படிக்க
கார பிடி கொழுக்கட்டை
கார பிடி கொழுக்கட்டை என்பது அரிசி மாவுடன், மசாலா பொருட்கள் சேர்த்து தாளித்து, காரசாரமாக செய்யப்படும் உணவு வகை ஆகும். கை விரல்களால் அழுத்தி பிடித்து இது செய்யப்படுவதால் இது பிடி கொழுக்கட்டை என வழங்கப்படுகிறது. காரம் சேர்த்து செய்தால் கார பிடி கொழுக்கட்டை, இனிப்பு கலந்து செய்தால் இனிப்பு பிடி கொழுக்கட்டை என இதில் இரண்டு வகைகள் உள்ளன. காலை உணவிற்கு கார பிடி கொழுக்கட்டை ஏற்றதாக இருக்கும். காலை உணவாக இதை தயார் செய்யும் […]
மேலும் படிக்க
வெந்தயக்களி
வெந்தய களி என்பது தமிழகத்தின் உணவு வகைகளில் பிரபலமான ஒன்று ஆகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கிறது. வெந்தயம், உளுந்து, அரிசி ஆகியவற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தயார் செய்யப்படும் இது நம் உடலை குளிர்ச்சியாகவும், தெம்பாகவும் வைத்திருக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும். இப்போது இந்த வெந்தயக் களியின் செய்முறை பற்றி இங்கு நாம் காணலாம். […]
மேலும் படிக்க
சுரைக்காய் அடை தோசை
சுரைக்காய் அடை தோசை காலை உணவிற்கு பொருத்தமாக இருக்கும் ஆரோக்கியமான உணவு ஆகும். இந்த சுரைக்காய் அடை தோசை கடலை பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மற்றும் சுரைக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த அடை தோசை வெறுமனே பருப்பை ஊற வைத்து, அவற்றை சுரைக்காய் துண்டுகளுடன் அரைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கீறிய தேங்காய் பற்கள் ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த அடை தோசைக்கு அவியல், மல்லி துவையல் மற்றும் வெல்லப் […]
மேலும் படிக்க
வேப்பம்பூ பச்சடி
சித்திரை மாதத்தின் துவக்கத்தில் வேப்ப மரத்தில் பூக்கள் பூக்க துவங்கும். கோடை காலமான இந்த பருவத்தில் பூக்கும் வேப்பம் பூக்களில் நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வேப்பம் பூக்களை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை வியாதி, சரும வியாதி ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சித்திரை மாதம் வரும் நயினார் நோன்பு அன்று வேப்பம்பூ பச்சடி சமைக்கும் வழக்கம் திருநெல்வேலி பகுதியில் உண்டு. இப்போது நாம் இங்கு வேப்பம் பூ பச்சடி எப்படி செய்ய வேண்டும் […]
மேலும் படிக்க
உளுந்தங்கஞ்சி
நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உளுந்தம் பருப்பில் நிறைந்து காணப்படுகின்றன. இது நம் உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சி தரக்கூடியது ஆகும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான வலிமையை அளித்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. இந்த உளுந்தை நாம் தோல் நீக்கியும், தோல் நீக்காமலும் உணவில் பயன்படுத்தலாம். இப்போது இந்த உளுந்தை கொண்டு கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: குத்து பருப்பு (அ) தொலி உளுந்தம் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

நெல்லை உணவு கேலரி

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

பார் போற்றும் பாரம்பரிய சுவை - திருநெல்வேலியின் தனித்துவம்!

திருநெல்வேலி மக்கள் உணவுகளை ரசித்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். பாரம்பரிய உணவுப் பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வரும். இங்கு ஆச்சிகள் வகுத்த சமையல் குறிப்புகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் அதன் சொந்த சமையல் பாணி மற்றும் செய்முறையைக் கொண்டுள்ளது, இது உணவின் மீதான தீவிர ரசனையை பிரதிபலிக்கிறது. உண்மையில் திருநெல்வேலி உணவுகள் பார் போற்றும் பாரம்பரிய சுவை கொண்டதாக திகழ்கிறது.
அறுசுவைக்கு விருந்தளிக்கும் உணவுகள்
  • சுடச்சுட கருப்பட்டி பணியாரம்!
  • நெய் மணக்கும் அல்வா!
  • தித்திக்கும் திருப்பாகம்!
  • தேங்காய் பாலில் சொதி குழம்பு!
  • காரசாரமான கூட்டாஞ்சோறு!
  • ஆரோக்கியமான உளுந்தஞ்சோறு!
இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு? மேலும் தெரிந்துகொள்ள எங்கள் பதிவுகளை காணுங்கள்!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top magnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram