Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

பங்குனி உத்திரம் (Panguni Uthiram)
பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரம் நாள்தான் பங்குனி உத்திரம் என கொண்டாடப்படுகிறது. அந்த தினமே முருகனுக்குரிய சிறப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .தமிழ் மாதத்தில் 12 ஆம் மாதமாக பங்குனி மாதம் விளங்குகிறது. நட்சத்திரங்களில் 12 ஆம் நட்சத்திரமாக உத்திர நட்சத்திரம் இருக்கிறது.12 என்னும் எண்ணில் வரக்கூடிய பங்குனி உத்திரம் 12 கைகளையுடைய முருகப் பெருமானுக்கு விசேஷ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் வருடம்தோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. சிறப்புக்குரிய பங்குனி உத்திரம் பிறந்த வரலாறு (History […]
மேலும் படிக்க
வீரவநல்லூர் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில் ( veeravanallur sri sundararaja perumal Temple )
தமிழ்நாட்டின் திருநெவேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற அழகிய கிராமத்தில், பழமையான வைணவ யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில். அமைந்துள்ளது, ஒருபுறம் பார்ப்பதற்கு அற்புதமான பொதிகை மலைத்தொடரும், மறுபுறம் பொருநை நதியும் ஓடி வருகின்ற அழகான இயற்கை காட்சிகளோடு , பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ளது . சுந்தரராஜப் பெருமாள் கோயில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். வீரவநல்லூரில் சேரன்மகாதேவிக்கு மேற்கே 6 கிமீ தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது […]
மேலும் படிக்க
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா "திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி" என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் அனைத்து மாதங்களும் திருவிழாக்கள் தான். தற்போது திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயம் என்று போற்றப்படும் […]
மேலும் படிக்க
108 திவ்ய தேசங்கள் - பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள் (திருநெல்வேலி & மதுரை) Pandiyanadu Divya Desam
வைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுக்குரிய திருத்தலங்கள் வைணவத் திருத்தலங்கள் என்று மக்களால் வணங்கக்கூடிய திருத்தலமாக போற்றப்படுகிறது. அந்த திருத்தலங்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள் ‘திவ்ய தேசங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. பெருமாளுக்குரிய108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்18 திவ்ய தேசங்கள் பாண்டியநாட்டில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகள் என்று சொல்லக்கூடிய திவ்யதேசங்கள் பாண்டிய நாட்டு தேசத்தில் திருநெல்வேலியிலும் அமைந்திருக்கின்றது. பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் மதுரை , திருநெல்வேலி , தூத்துக்குடி ,புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளடக்கிய திவ்யதேசங்களாக பாண்டிய […]
மேலும் படிக்க
நான்கு உற்சவர்கள் கொண்ட திருச்செந்தூர் திருக்கோவில்
திருநெல்வேலி அருகில் உள்ளது திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.  பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் இந்த திருக்கோவிலில் நான்கு உற்சவர்கள் காட்சி தருவது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூரில் காட்சிதரும் நான்கு உற்சவர்கள்: ஸ்ரீ ஆறுமுகநயினார் (சண்முகப்பெருமான்) ஸ்ரீ ஜெயந்திநாதர் ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான் ஸ்ரீ குமரவிடங்க பெருமான். இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி […]
மேலும் படிக்க
ஆழ்வார்திருநகரி கல் நாதஸ்வரத்தின் சிறப்பு
கல்லிலே கலை வண்ணம் கண்ட நம் முன்னோர்கள், கல்லில் இசை வண்ணமும் கண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது கல் நாதஸ்வரம். தமிழகத்தில் மிகவும் அரிதாக காணப்படும் இந்த கல் நாதஸ்வரத்தை நெல்லை அருகில் உள்ள, ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவிலில் இன்றும் நாம் காண முடிகிறது. இங்கு காணப்படும் கல் நாதஸ்வரம் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். முன்னர் இந்த பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இந்த கல் நாதஸ்வரம் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதாக […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்(Vasudevanallur Chinthamaninatha Swamy Temple)
சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம்) அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம்) திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் (புளிய மரம்). தீர்த்தம்: கும்ப தீர்த்தம், கருப்பை நதி. வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் வரலாறு(History of Vasudevanallur Chinthamaninatha Swamy Temple) முற்காலத்தில் வாழ்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அதிலும் வணங்கினால் சிவபெருமானை மட்டுமே வணங்குவேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஒருநாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி […]
கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில் (Gangaikondan Kailasanathar Temple)
சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புளிய மரம். தீர்த்தம்: கங்கை தீர்த்தம் (தெப்பம்), சித்ரா நதி. கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில் வரலாறு: (Gangaikondan Kailasanathar Temple History) முற்காலத்தில் புளியமரங்கள் சூழ்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக தினமும் நிறைய பசுக்கள் வரும். அப்போது ஒருநாள் மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்துக்குள் தானாக பாலை சொரிந்தது. இந்த சம்பவம் அடுத்து வந்த […]
மேலவீரராகவபுரம் சொக்கலிங்கசுவாமி திருக்கோவில்(Melaveeraragavapuram Chokkalingaswamy Temple)
சுவாமி: ஸ்ரீ சொக்கநாதர். அம்மை: ஸ்ரீ மீனாட்சி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி.   மேலவீரராகவபுரம் சொக்கலிங்கசுவாமி திருக்கோவில் வரலாறு(History of Melaveeraragavapuram Chokkalingaswamy Temple): முற்காலத்தில் அழகிய பாண்டியன் என்னும் மன்னன், மதுரையை தலைநகராகக் கொண்டு திருநெல்வேலி வரை ஆட்சி செய்து வந்தான். மன்னன் அழகிய பாண்டியனுக்கு மதுரையில் உறையும் மீனாட்சி - சொக்கநாதர் மீது அளவு கடந்த பக்தி இருந்தது. இதனால் தினமும் திருக்கோவில் சென்று மீனாட்சி […]
திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில்
பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில்(Tirunelveli Palayam Salai Kumaraswamy Temple) மூலவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ பாளையஞ்சாலைக்குமார சுவாமி. உற்சவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சண்முகர். தீர்த்தம்: சிந்துபூந்துறை தாமிரபரணி தீர்த்தக்கட்டம். பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில் வரலாறு: (Palayansalai Kumaraswamy Temple) முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குறுக்குத்துறை என்னும் ஊரில் சிலைகள் வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். இங்கிருந்து […]
மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில்
சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆவுடையம்மை. திருக்கோவில் விருட்சம்: வன்னி மரம். தீர்த்தம்: வருண தீர்த்தம். தல வரலாறு : முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியின் வழியாக ஸ்ரீ வல்லப பாண்டியன் என்னும் மன்னன் தனது படைகளை வழிநடத்தி சென்றான். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது பொழுது சாயும் நேரம் நெருங்கியதால் மன்னன் அங்கேயே ஷிவா பூஜை செய்ய முற்பட்டு, சிவாலயத்தை தேடி அலைந்தான். அனால் அங்கு எந்த ஒரு சிவாலயமும் இல்லாத காரணத்தினால் […]
கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில்(Keezhakallur Puravelinathar Temple)
சுவாமி: ஸ்ரீ புறவேலி நாதர் அம்மை: ஸ்ரீ அழகம்மை திருக்கோவில் விருட்சம்: வில்வம் தீர்த்தம்: தாமிரபரணி. கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில் தலவரலாறு(Keezhakallur Puravelinathar Temple): முற்காலத்தில் தற்போது திருக்கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியில் பசு ஒன்று மேய்ச்சலுக்கு வந்து கொண்டிருந்தது. அப்படி மேய்ச்சலுக்கு வந்த அந்தப் பசு தினமும் அங்கிருந்த கல்லின் மீது பாலை தானாகச் சொரிந்து வந்தது. ஒருநாள் வழக்கம்போலப் பசு அந்த இடத்திற்கு வந்து பாலை சொரிந்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த துன்மார்க்கன் […]
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் (Serndhapoomangalam Kailasanathar Thirukovil)
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் (Sedhraboomangalam Kailasanathar Temple) நவகைலாய ஸ்தலங்களில் ஒன்பதாவது தலமான சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சௌந்தர்ய நாயகி. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்:  தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் கடைசியாக ஒன்பதாவது  மலர் […]
இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்
இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில் நவகைலாய ஸ்தலங்களில் எட்டாவது தலமான இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சௌந்தர்ய நாயகி. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்: பாலாவி தீர்த்தம், தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் எட்டாவது மலர் கரை ஒதுங்கிய […]
மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

வீரவநல்லூர் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில் ( veeravanallur sri sundararaja perumal Temple )
தமிழ்நாட்டின் திருநெவேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற அழகிய கிராமத்தில், பழமையான வைணவ யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில். அமைந்துள்ளது, ஒருபுறம் பார்ப்பதற்கு அற்புதமான பொதிகை மலைத்தொடரும், மறுபுறம் பொருநை நதியும் ஓடி வருகின்ற அழகான இயற்கை காட்சிகளோடு , பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ளது . சுந்தரராஜப் பெருமாள் கோயில் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். வீரவநல்லூரில் சேரன்மகாதேவிக்கு மேற்கே 6 கிமீ தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது […]
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்கள் (Nava Tirupathi Temples)
பெருமாளுக்குரிய வைணவ ஸ்தலங்களில் 108 திவ்யதேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில் நவதிருப்பதி என்று புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்கள் நெல்லை பகுதியை சுற்றி அமைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நவதிருப்பதி கோவில்கள் அனைத்தும் தென்பகுதி ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன. நவதிருப்பதி ஸ்தலங்கள் அனைத்தும் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளது. இதனை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் என்று கூறுவார்கள். இவை அனைத்தும் 108 வைணவ திவ்ய தேசங்களில் அடங்கும். இந்தக் கோவில்கள் அனைத்தையும் இரண்டே நாட்களில் தரிசிக்க […]
கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோவில் (Karisoozhndamangalam Venkatachalapathy Temple)
மூலவர்: ஸ்ரீ சுதர்சன நரசிம்மர். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி. தீர்த்தம்: தாமிரபரணியில் உரோமச தீர்த்தக்கட்டம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில். இந்தக் கோவில் "வெங்கடாசலபதி கோவில்" என்று அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பது ஸ்ரீ சுதர்சன நரசிம்மரே ஆகும். மஹாவிஷ்ணுவின் பிரதான ஆயுதங்களுள் ஒன்றாக விளங்கும் சக்கரம் தான் சுதர்சன ஆழ்வார் என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. தனக்கு […]
மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்(Melaveeraragavapuram Varadharaja Perumal Temple)
மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி - பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள். தாயார்கள்: வேதவல்லி தாயார், பெருந்தேவி தாயார். தீர்த்தம்: வீரராகவ தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வரலாறு(History of Melaveeraragavapuram Varadharaja Perumal Temple): முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த இந்த பகுதியைச் சந்திர வம்சத்து அரசரான கிருஷ்ணவர்மன் என்னும் மன்னன் நீதி, நெறி தவறாமல் செங்கோல் செலுத்தி ஆட்சி செய்து வந்தான். […]
திருநெல்வேலி நகரம் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில்(Sri Kariyamanikka Perumal Temple Tirunelveli)
ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில்(Sri Kariyamanikka Perumal Temple) மூலவர்: ஸ்ரீ நீலமணி நாதர். உற்சவர்: ஸ்ரீ தேவி - பூ தேவி சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள். தாயார்கள்: ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ கோமளவல்லி தாயார். விமானம்: ஆனந்த விமானம். தீர்த்தம்: பத்மநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் வரலாறு: (Kariyamanikka Perumal Temple History) சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வியாச மஹரிஷியின் சீடர்களுள் ஒருவரான பைலர் என்பவர் […]
Navathirupathi - 4: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Vadakku Kovil
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் […]
Navathirupathi - 5: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Therku Kovil
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் […]
Navathirupathi - 6: Mayakoothan Thirukulanthai Temple
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்து கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்குளந்தை". இது சனியின் அம்சமாக விளங்குகிறது. திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது "பெருங்குளம்" என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் […]
மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram