திருநெல்வேலிக்கு வருகை தரும் அனைவருமே இங்கு கிடைக்கும் சுவையான அல்வாவை வாங்கி கொண்டு தான் வீடு திரும்புவார்கள். திருநெல்வேலி அல்வாவுக்கு என்று தனி சுவையும் தரமும் இருப்பதால், அனைவருக்குமே அல்வா என்றால் கொள்ளை பிரியமாக தான் இருக்கும். அல்வா தயார் செய்ய பயன்படுத்தும் சம்பா கோதுமை மற்றும் தாமிரபரணி தண்ணீர் தான் அதன் தனித்துவமான சுவைக்கு காரணம். அல்வா பற்றிய எங்கள் தற்போதைய பதிவுகள் உங்களுக்கு சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது.