Logo of Tirunelveli Today
English

சுற்றுலா தலங்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் வகையில் எண்ணற்ற சுற்றுலா தலங்களை கொண்டிருக்கிறது திருநெல்வேலி!

நெல்லை சுற்றுலா தலங்கள்

சுற்றுலா வழிகாட்டி குறிப்புகள்

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அருகாமையிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பற்றிய தகவல்கள், சென்றடையும் வழிகாட்டி ஆகியவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காணத்தக்க இடங்கள்

குற்றாலம்:
"தென்னகத்தின் ஸ்பா" என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலியில் இருந்து மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இங்குள்ள பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றில் குளிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கும். ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் சீசன் காலத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது உற்சாகமான அனுபவத்தை தரும்.

மாவட்ட அறிவியல் மையம்:
குழந்தைகள் மிகவும் விரும்பும் இடமாக விளங்கும் மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இங்கு அமையப்பெற்றுள்ள 'ஃபன் சயின்ஸ்', 'பாப்புலர் சயின்ஸ்', 'எலெக்ட்ரானிக்ஸ்' , 'நியூ விங் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ்' ஆகிய நான்கு சிறப்பு பகுதிகள், கோளரங்கம், அறிவியல் பூங்கா, வான் கண்காணிப்பு மையம் ஆகியவை கல்வி சுற்றுலா வரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

அரியகுளம் பறவைகள் சரணாலயம்:
பறவை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் அரியகுளம். இங்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக கூட்டமாக வருகின்றன. அவற்றுள் ஸ்பாட் டவ், க்ரீன் சாண்ட்பைப்பர், பிளாக் விங்கிடு ஸ்டில்ட் மற்றும் காமன் கூட் ஆகிய பறவைகள் காண்பதற்கு அரிதானவை. இந்த சரணாலயம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமையப்பெற்றுள்ளது.

மாஞ்சோலை:
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதியில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் தான் மாஞ்சோலை. இங்கு கண்ணை கவரும் பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்டுகள் அமையப்பெற்றுள்ளன. மாஞ்சோலையில் விளையும் தேயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமானது. மாஞ்சோலையில் உள்ள குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து, கோதையாறு ஆகிய இடங்கள் சுற்றுலா செல்வோரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்:
தென்னிந்தியாவில் நீர்ப்பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த இடமாக திகழ்கிறது கூந்தங்குளம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் உள்ள இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு விதவிதமான உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் மற்றும் காண்பதற்கு அரிதான பலவகை பறவைகள் சீசன் காலத்தில் அணிவகுத்து வரும்.

அகத்தியர் அருவி:
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வற்றாது வளம் கொழிக்கும் தாமிரபரணி ஆறு பாயும் வழித்தடத்தில் அமையப்பெற்றுள்ளது அகத்தியர் அருவி. இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் வற்றாமல் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த அருவிக்கு அருகில் தான் பாபநாசம் சிவன் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

சுற்றுலா டிப்ஸ்
  • செல்லும் இடத்திற்கான பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துவிட வேண்டும். எந்த ரயில் அல்லது பஸ், கோச், இருக்கை எண்கள் எல்லா விவரங்களும், குடும்பத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் போகும் இடங்களில் இருந்து என்ன வாங்கிவர வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொள்வது அவசியம். எதையும் மறந்து விடாமல் இருக்க இது உதவும்.
  • என்ன இடங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை என்ற தகவல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். தேவைப்படும் துணிமணிகள், சோப்பு, பவுடர், பொட்டுகள் எல்லாவற்றையும் அவசியம் எடுத்துச்செல்ல வேண்டும். போகும் இடத்தில் தேடி வாங்க முடியாது.
  • அடையாள அட்டை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தங்க, வைர நகைகளை அணிவதைத் தவிர்த்து எளிய அளவான நகை அணிவது பாதுகாப்பானது. வீட்டில் உள்ள விலை உயர்ந்த நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டுப் போனால் பயணம் நிம்மதியாக இருக்கும்.
  • உறவினர், நண்பர் ஊருக்குச் செல்வதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களின் சௌகரியத்தை தெரிந்துகொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும்.
  • பயணத்தின்போது சாப்பிடுவதற்கு வீட்டிலேயே உணவு தயாரித்துக்கொண்டு சென்றால் சுகாதாரமானது. சிக்கனமும்கூட.
    * தேவையான மருந்து, மாத்திரை எடுத்துச்செல்ல வேண்டும்.

தற்போதைய பதிவுகள்

இயற்கை எழில் கொஞ்சும் திருநெல்வேலி சுற்றுலா தலங்கள் பற்றிய எங்களின் சமீபத்திய பதிவுகளை இங்கே பார்வையிடுங்கள்.

நெல்லை திருத்தலங்கள்

பண்பொழி (Panboli)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் பண்பொழி இரண்டாம்நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு தலைமையிடமான தென்காசிக்கு கிழக்கே 9 கிமீதொலைவில் பண்பொழி பேரூராட்சி இருக்கிறது. செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும். கடையநல்லூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ள பேரூராட்சியாக விளங்குகிறது. 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி 8 சகிமீ பரப்பளவு கொண்டு அமைந்திருக்கிறது. இந்த மாநகராட்சி தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் […]
மேலும் படிக்க
குற்றாலம் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
திருநெல்வேலிக்கு மேலும் அழகு சேர்க்கும் பாபநாசம் அணை குற்றாலத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாபநாசம் அணை விளங்குகின்றது. 143 அடி வரை தண்ணீர் இந்த அணைகளில் தேக்கி வைக்க முடியும். பாபநாசம் அணையின் கொள்ளளவு 5500 மில்லியன் கனஅடியை.கொண்டுள்ளது. 1942ஆம் ஆண்டு முதன்முதலில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலையில் பாபநாசத்தில் கட்டப்பட்ட ஒரு அழகிய அணையாகும். தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள பாபநாச […]
மேலும் படிக்க
சுத்தமல்லி அணைக்கட்டு
அடிக்கிற வெயிலுக்கு எங்கயாவது போய் தண்ணீரில் விழுந்து குளிச்சா சுகமா இருக்கும் என்று நம்ம எல்லோருக்குமே தோணும். அந்த அளவுக்கு வெயில் மண்டைய சுட்டெரிக்குது. என்னதான் நம்ம மாநகரத்துக்குள்ள தாமிரபரணி ஆறு ஓடினாலும், கொஞ்சம் அமைதியான பகுதிகளுக்கு போய் நாம குளிச்சுட்டு வர்றது தனி சுகம் தான் என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் நெல்லை மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு ஒரு சிறப்பான பகுதியாக விளங்குகிறது. அருகிலுள்ள […]
மேலும் படிக்க
குற்றாலம் அருவி - தென்னிந்தியாவின் ஸ்பா
திருநெல்வேலி அருகே உள்ள அழகிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் குற்றாலம் தென் தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 160 மீ (520 அடி) உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாக விளங்குகிறது. இந்த பகுதியில் ஏராளமான அற்புதமான நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ளன. “தென்னிந்தியாவின் ஸ்பா” என்று சிறப்பித்து அழைக்கப்படும் குற்றாலம் அருவிகளின் தண்ணீர், மலையில் நிறைந்திருக்கும் பல அற்புத மூலிகைகள் காரணமாக மருத்துவ பண்புகள் நிறைந்து […]
மேலும் படிக்க
மனதை மயக்கும் மாஞ்சோலை (Manathai Mayakkum Manjolai)
மாஞ்சோலை என்னும் பகுதி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன. தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீத்தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் […]
மேலும் படிக்க
களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயம்(Kalakkadu Mundanthurai Tiger Sanctuary)
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அமையப்பெற்றுள்ளது "களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயம்". இது தமிழ்நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். ஏறக்குறைய 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பரந்து விரிந்து காணப்படும் களக்காடு - முண்டந்துறை புலிகள் வனவிலங்கு சரணாலயம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த பொக்கிஷம் ஆகும். இந்தச் சரணாலயத்தில் காணப்படும் அடர்த்தியான, இருண்ட […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

கேலரி

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
இயற்கை வளங்கள் நிறைந்த பூமி - திருநெல்வேலி!
இயற்கை வளங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு கிழக்கே பசுமையான நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது திருநெல்வேலி மாவட்டம். நெல் விளையும் வயல்கள், உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், சாலையின் ஓரம் அணிவகுக்கும் மருத மரங்கள் ஆகியவை சூழ்ந்து காணப்படும் இங்கு எண்ணற்ற திருக்கோவில்கள், ஆறுகள், அணைக்கட்டுகள், அருவிகள், சரணாலயம், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலியை அதன் முழுமையான அழகுடன் கண்டு ரசிக்க நீங்கள் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம்.
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram