Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-1)
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என திருஞானசம்பந்தரும், "தண் பொருநைப் புனல் நாடு" என சேக்கிழார் பெருமானும், "பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திரு நதி" என்று கவிச் சக்கரவர்த்தி கம்பரும் பாடிப் புகழ்ந்த பெருமை மிகு தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். சுவாமி பெயர்: திருமூலமகாலிங்கர் ( ஆதி மூலவர் ) நெல்லையப்பர் ( வெட்டுபட்ட சுயம்பு மூர்த்தி ) நெல்லை கோவிந்தர். அம்மை பெயர்: காந்திமதி அம்மை . […]
மேலும் படிக்க
Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi - 3)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புக்கள்: (Tiruchendur Subramaniya Swamy Temple Specialties) இங்கு தரப்படும் பன்னீர் இலை விபூதி, தீராத நோய்கள் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது. இந்த பன்னீர் இலை விபூதியை பெற்று விசுவாமித்திரர் தன்னுடைய குன்ம நோய் மற்றும் ஆதி சங்கரர் தன்னுடைய காச நோய் நீங்கப்பெற்றதாக வரலாறு கூறுகிறது. ஆதி சங்கரர் இங்கு பாடியுள்ள சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாடலில் இந்த பன்னீர் இலை விபூதியின் மகத்துவத்தை பாடியுள்ளார். இந்த பன்னீர் இலையில் […]
மேலும் படிக்க
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்: பகுதி-2
திருச்செந்தூர் திருக்கோவில் உற்சவர் ஜெயந்தி நாதர் (Tiruchendur Subramania swamy Temple Jeyanthinathar): திருச்செந்தூரில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் பிரதான பிரதி பிம்ப உற்சவராக விளங்குகிறார் ஜெயந்தி நாதர். கந்த சஷ்டி திருவிழாவில் இவரே கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்காரம் செய்து வெற்றி பெறுவார் என்பதால் இவருக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். இவரே நித்திய உபயதாரர் கட்டளையான தங்கத் தேர் உலாவில் எழுந்தருளுவார் என்பதும் சிறப்பம்சம். திருச்செந்தூர் திருக்கோவில் உற்சவர் குமர விடங்கப் பெருமான் (Tiruchendur […]
மேலும் படிக்க
Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi - 1)
ஆறு படை வீடுகளுள் இரண்டாம் படை வீடு என்று சிறப்பிக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மூலவர் பெயர்: சுப்பிரமணிய சுவாமி. உற்சவர்கள் பெயர்: வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகர். வள்ளி, தெய்வானை உடனுறை குமரவிடங்கர். வள்ளி, தெய்வானை உடனுறை ஜெயந்திநாதர். அலைவாயு கந்தப் பெருமான். திருக்கோவில் விருட்சம்: பன்னீர் மரம். தீர்த்தங்கள்: வதனாறம்ப தீர்த்தம் ( கடல் ). நாழிக் கிணறு. சரவணப் பொய்கை. இவை தவிர முற்காலத்தில் இங்கு 24 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. […]
மேலும் படிக்க
Tirunelveli Thondargal Nainar Thirukovil
திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் திருக்கோவில் திருஞானசம்பந்தர் பெருமான், அகத்தியர் மற்றும் தொண்டர்கள் பதினாராயிரவர் வணங்கிய திருமேற்றளியுடைய நயினார் திருக்கோவில். சுவாமி பெயர்: திருமேற்றளி உடைய நயினார் (எ) தொண்டர்கள் நயினார். அம்மை பெயர்: கோமதி அம்மை (எ) ஆவுடைநாயகி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தங்கள்: பஞ்ச தீர்த்தம், தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான, திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டில் தல யாத்திரை மேற்கொண்டார். அப்போது திருக் குற்றாலம் சென்று […]
மேலும் படிக்க
Ambasamudram Kasipanathar Temple(அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்)
அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில்(Ambasamudram Kasipanathar Temple) தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமையப் பெற்றுள்ளது அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை உடனுறை காசிப நாதர் திருக்கோவில். இக் கோவில் எரிச்சாளுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமி பெயர்: காசிப நாதர். அம்மை பெயர்:  மரகதாம்பிகை. திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தங்கள்: தாமிரபரணியில் காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், கோகில தீர்த்தம், புழுமாறி தீர்த்தம். சிறப்பு சன்னதிகள்: எரித்தாண்டார், மகா விஷ்ணு. அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் வரலாறு:(Ambasamudram Kasipanathar Temple […]
மேலும் படிக்க
1 7 8 9 10 11 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram