Logo of Tirunelveli Today
English

திருக்கோவில்கள்

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

ஆன்மீக குறிப்புக்கள்

முக்கிய விரத நாட்கள், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் பற்றிய குறிப்புக்கள்.
முக்கிய விழாக்கள்

ஆனி தேரோட்டம்:
தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேர் என்று சிறப்பிக்கப்படும் ராஜ தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி அம்மை ஆடிப்பூரம் முளைக்கொட்டு உற்சவம்:
ஆடிப்பூரம் அன்று மாலை அம்மன் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருள முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

திருப்புடைமருதூர் தைப்பூச தீர்த்தவாரி:
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவிலில் தைப்பூசம் அன்று பகலில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி தபசு / திருக்கல்யாணம் விழா:
திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் ஐப்பசி பூரம் அன்று தபசு விழாவும், மறுநாள் ஐப்பசி உத்திரம் அன்று திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.

பாளையங்கோட்டை தசரா விழா:
மைசூருக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களிலிலும் ஒன்றாக சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆழ்வார்திருநகரி வைகாசி விசாக திருவிழா:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் நவதிருப்பதிகளில் இருந்து ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளி கருட சேவை காட்சியருள்வார்கள்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா:
அசுரரை வென்று தேவர்களை காத்த குமரப்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெறும்.

நாங்குநேரி தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் தை மாதம் வரும் அமாவாசை அன்று ஒரு கோட்டை தூய நல்லெண்ணெயால் காப்பு செய்விக்கப்படும். இந்த எண்ணெய் கோவிலில் உள்ள எண்ணெய் கிணற்றில் சேமிக்கப்படும்.

முக்கிய விரதங்கள்

சிவ விரதங்கள்

  • ஆனி உத்திரம்
  • சிவராத்திரி, பிரதோஷ விரதம்
  • கேதாரகௌரி விரதம்

விநாயகர் விரதங்கள்

  • சதுர்த்தி விரதம்
  • விநாயகர் நவராத்திரி விரதம்
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்
  • பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்)

சக்தி விரதங்கள்

  • நவராத்திரி, வரலட்சுமி நோன்பு
  • ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய்
  • பங்குனித் திங்கள், மாசி மகம்
கந்த விரதங்கள்
  • கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
  • வைகாசி விசாகம், தைப்பூசம்
  • திருக்கார்த்திகை விரதம்

தற்போதைய பதிவுகள்

"திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்பந்த பெருமான் பாடிய திருநெல்வேலி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள், உற்சவங்கள் பற்றிய தகவல்கள்.

ஆலய தரிசனம்

திருவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவில் (Srivaikuntam Sri Vaikundanatha Perumal Temple)
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவைகுண்டம்". 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: வைகுண்டநாதர் (நின்ற கோலம்). உற்சவர் பெயர் : கள்ளர்பிரான் (சோரநாதர்). தாயார்கள்: வைகுந்தநாயகி, சோரநாதநாயகி. விமானம்: இந்திர விமானம். திருக்கோவில் விருட்சம்: […]
மேலும் படிக்க
Chepparai Azhagiya koothar Thirukovil
உலகின் தொன்மையான நடராஜர் அருளும் செப்பறை திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில். சுவாமி பெயர்: நெல்லையப்பர். அம்மை பெயர்: காந்திமதி. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணியின் புஷாபதன தீர்த்தக்கட்டம். சிறப்பு சன்னதி: செப்பறை அம்பலம் அழகியகூத்தர் சன்னதி. செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் […]
மேலும் படிக்க
Palayamkottai Sri Mannar Rajagopala Swamy Temple
பாளையங்கோட்டை அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் (Palayamkottai Azhagiya Mannar Rajagopalaswamy Temple) பாளையங்கோட்டை நகரின் மத்தியப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது அழகியமன்னார் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இக்கோவிலை இப்பகுதி மக்கள் "கோபாலங்கோவில்" என்றே அழைக்கின்றனர். மூலவர் பெயர் (கீழ்தளத்தில்): வேதவல்லி, குமுதவல்லி உடனுறை வேதநாராயணர். மூலவர் பெயர் (மேல்தளத்தில்): ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை அழகியமன்னார். உற்சவர் பெயர்: இராஜகோபாலர். திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம். விமானம்: அஷ்டாங்க விமானம். தீர்த்தம்: […]
மேலும் படிக்க
Karivalam Vandha Nallur Kovil
தென்பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களுள் ஒன்றாக விளங்கி வருவது கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மை உடனுறை பால்வண்ணநாதர் திருக்கோவில். தென்பாண்டி நாட்டின் பஞ்சபூதத்தலங்களாவது., சங்கரன்கோவில் - நிலம் கரிவலம்வந்த நல்லூர் - நெருப்பு தேவதானம் - ஆகாயம் தாருகாபுரம் - நீர் தென்மலை - காற்று ஆகியவையாகும். இவற்றுள் கரிவலம்வந்தநல்லூர் நெருப்பு தலமாக விளங்குகிறது. எனவே திருவண்ணாமலைக்கு நிகரான சிறப்பை இது பெறுகிறது. சுவாமி பெயர்: பால்வண்ணநாதர். அம்மை பெயர்: ஒப்பனையம்மை. திருக்கோவில் விருட்சம்: களா மரம். தீர்த்தம்: நிட்சேப […]
மேலும் படிக்க
Piravipini Theerkum Thirukutralam(பிறவிப்பிணி தீர்க்கும் திருக்குற்றாலம்)
பிறவிப்பிணி தீர்க்கும் திருக்குற்றாலம் கோவில்(Piravipini Theerkum Thirukutralam Temple) திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின், திரிகூடமலை அடிவாரத்தில் சிவமதுகங்கை அருவியின் கரையில், சங்கு வடிவில் அமையப்பெற்றுள்ளது திருக்குற்றாலம் திருக்கோவில். தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டின் 14-தலங்களுள் ஒன்றாக விளங்குவது., திருக்குற்றாலம் குழல்வாய்மொழி அம்பாள் உடனாய திருக்குற்றாலநாதர் திருக்கோவில். சுவாமி பெயர்: திருக்குற்றாலநாதர். அம்மை பெயர்: குழல்வாய்மொழி அம்மை. திருக்கோவில் விருட்சம்: குறும்பலா மரம். தீர்த்தங்கள்: தேனராகிய சிற்றாறு, சிவமதுகங்கை, வடவருவி. சிறப்பு சன்னதிகள்: ஆதி குறும்பலா, […]
மேலும் படிக்க
பாபநாசம் கோயில் (Papanasam Temple)
பாவநாசம் உலகாம்பிகை உடனுறை பாவவிநாச சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது., பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில். சுவாமி பெயர்:பாவவிநாசநாதர். அம்மை பெயர்:உலகம்மை. திருக்கோவில் விருட்சம்:முக்கிளா மரம். தீர்த்தங்கள்:தாமிரபரணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம். சிறப்பு சன்னதிகள்:கல்யாணசுந்தரர் சன்னதி, புனுகு சபாபதி சன்னதி. பாபநாசம் கோவில் வரலாறு(Papanasam […]
மேலும் படிக்க
1 12 13 14
மேலும் படிக்க

சைவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

வைஷ்ணவ திருத்தலங்கள்

மேலும் படிக்க

திருக்கோவில்கள் புகைப்படத்தொகுப்பு

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

தாமிரபரணி நதிக்கரை திருக்கோவில்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தன்பொருநை என்று சிறப்பிக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் எண்ணற்ற பழம்பெருமை வாய்ந்த சிவன் திருக்கோவில்கள், விஷ்ணு திருக்கோவில்கள், கிராம தெய்வங்களின் திருக்கோவில்கள், சாஸ்தா திருக்கோவில்கள், அம்மன் திருக்கோவில்கள், முருகன் திருக்கோவில்கள், விநாயகர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப்பெற்ற திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
திக்கனைத்தும் திருக்கோவில்கள்
  • நவதிருப்பதி
  • நவகைலாயம்
  • ஆதி நவகைலாயம்
  • பஞ்ச குரோச ஸ்தலங்கள்
  • பஞ்ச விக்ரக ஸ்தலங்கள்
  • பஞ்ச பூத ஸ்தலங்கள்
  • பஞ்ச ஆசன ஸ்தலங்கள்
  • நவசமுத்திர ஸ்தலங்கள்
  • முப்பீட ஸ்தலங்கள்
  • சாஸ்தா திருத்தலங்கள்
என திக்கனைத்திலும் திருக்கோவில்களை கொண்டது திருநெல்வேலி!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top calendar-fullmagnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram