Logo of Tirunelveli Today
English

அதிசய உறங்காப்புளி மரம்

Two trees in tirunelveli looking different with a broad trunk.

நெல்லை மாநகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஆழ்வார்திருநகரி என்னும் வைணவ திவ்ய தேச ஸ்தலம். இங்கு பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார், கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதியில் பெருமாளுக்கு நிகரான அந்தஸ்த்தில் எழுந்தருளி காட்சி தருகிறார். தாமிரபரணி நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோவிலில் பெருமாள் ஆதிநாதர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். 

இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக விளங்கும் உறங்காப்புளி மரம் பல ஆயிரம் வருடங்கள் பழமையானதாகும். இந்த மரத்தின் அடியிலிருந்து நம்மாழ்வார் தவம் செய்ததாக சிறப்பித்து கூறப்படுகிறது.பொதுவாக புளிய மரத்தின் இலைகள் இரவில் மூடிக் கொள்ளும். ஆனால் இங்குள்ள மரத்தின் இலைகள் இரவிலும் மூடாமல் இருப்பதால் உறங்காப்புளி என்று அழைக்கப்படுகிறது. இந்த மரத்தை தரிசித்து வணங்கினால் பெருமாளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram