Logo of Tirunelveli Today
English

சுத்தமல்லி அணைக்கட்டு

வாசிப்பு நேரம்: 3 mins
No Comments
Man taking bath in suthamalli dam.

அடிக்கிற வெயிலுக்கு எங்கயாவது போய் தண்ணீரில் விழுந்து குளிச்சா சுகமா இருக்கும் என்று நம்ம எல்லோருக்குமே தோணும். அந்த அளவுக்கு வெயில் மண்டைய சுட்டெரிக்குது. என்னதான் நம்ம மாநகரத்துக்குள்ள தாமிரபரணி ஆறு ஓடினாலும், கொஞ்சம் அமைதியான பகுதிகளுக்கு போய் நாம குளிச்சுட்டு வர்றது தனி சுகம் தான் என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் நெல்லை மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு ஒரு சிறப்பான பகுதியாக விளங்குகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு சுத்தமல்லி கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பச்சை பசேல் வயல் பகுதிகளுக்கு நடுவே அமையப்பெற்றுள்ளது. கிராமத்துக்குள் அமையப்பெற்றுள்ள இடம் என்பதால் இங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிப்பது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இங்கிருந்து தான் நெல்லை கால்வாய் தனியாக பிரிந்து செல்கிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் நடுவே ஒரு சிறிய மலை குன்று ஒன்று இருக்கிறது. அந்த குன்றின் மீது ஒரு சிறு கோவிலும் இருக்கிறது. இந்த குன்றின் மேல் நின்று பார்த்தால் ஆற்றின் பகுதியும், வயல் வெளிகளும் மிக அழகாக தெரியும்.

Man washing clothes in suthamalli dam.

இந்து மலைக்குன்றுக்கு மேலே கோடை காலமான தற்போது மிக எளிதாக சென்று வரலாம். ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் போது இதற்கு செல்வது சற்று கடினமான விஷயமாக இருக்கும். ஆற்றின் கரையில் பெரிய பெரிய ஆல மரங்கள் நமக்கு நிழல் தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றன, மேலும் சிறு மண்டபங்களுடன் கூடிய சாஸ்தா கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பகுதியின் அருமை தெரிந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் வீட்டில் இருந்தே உணவு சமைத்து எடுத்து வந்து குளித்து முடித்தவுடன், குடும்பமாக அமர்ந்து உணவருந்தியும் செல்கின்றனர். கோடை கால வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட நாமும் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு வரலாம். இங்கு செல்ல நம் சொந்த வாகனங்கள் இருந்தால் வசதியாக இருக்கும். அல்லது வாடகை வாகனங்களை அமர்த்தியும் சென்று வரலாம்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரில் இருந்து பேட்டை வழியாக சேரன்மகாதேவி சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் பயணித்தால் சுத்தமல்லி விலக்கு என்ற இடம் வரும். இந்த சுத்தமல்லி விலக்கில் இருந்து கிழக்கே பிரிந்து செல்லும் சாலை வழியாக பயணித்தால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் சுத்தமல்லி கிராமம் வரும். அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது சுத்தமல்லி அணைக்கட்டு.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 1 hr 27 min (69.2km)
  • Tirunelvelli - 44 min (20.2Km)
  • Tirchendur - 2 hr 4 min (71km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by பிரவீன்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram