Logo of Tirunelveli Today

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட்ட 23 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!

June 26, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு படிப்படியாக தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் 28/06/2021 ஆம் தேதி முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட்ட மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் குறித்த விவரம்:

மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பயணிகள் மட்டும் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பாத்திரக் கடைகள், போட்டோ / வீடியோ ஸ்டூடியோ, பேன்ஸி கடைகள், சலவை கடைகள் , அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கணினி வன்பொருட்கள். மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28/06/2021 ஆம் தேதி முதல் 05/07/2021ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify