சித்திரை மாத திருவோணம் நட்சத்திரமான நேற்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்றது. சிவன் கோவில்களில் நடராஜருக்கு வருடத்திற்கு 6 தினங்கள் அபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.
அவைகள்.,
இந்த தினங்களில் சிவன் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். நேற்று சித்திரை திருவோணத்தை முன்னிட்டு திருநெல்வேலி பகுதியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், அருள்மிகு செப்பறை நடராஜர் ஆலயம், சந்திப்பு கைலாசநாதர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோவில்களில் நடராஜ பெருமானுக்கு நேற்று சிறப்பு அபிஷேங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை விமரிசையாக நடைபெற்றது. தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.