Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

May 14, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பரவி வரும் நோய்த்தொற்றினால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் வகையில், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசோதனையின்  மூலம் நோய்த்தொற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், மேலும் இந்தத் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே மக்கள் அனைவரும் வீடு தேடி வந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம், ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அரசு சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், ஊராட்சி துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறு குழுக்களாக பிரிந்து வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு  கண்டறிவதற்கான பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மக்களிடையே முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify