Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்டத்தில் இ-பதிவு முறை அமலுக்கு வந்தது.

May 18, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்வதற்கும் இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் நேற்று முதல் இந்த இ-பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கங்கைகொண்டான், வசவப்பபுரம், மாறாந்தை, காவல்கிணறு, தேவர்குளம், கிருஷ்ணாபுரம், உவரி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாநகர பகுதிகளான பழைய பேட்டை, பேட்டை, டக்கரம்மாள்புரம், கே.டி.சி. நகர், வி.எம். சத்திரம், தாழையூத்து ஆகிய இடங்களிலும் காவல்துறையினர் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வந்தார்கள். அந்த வழியாக பயணம் மேற்கொண்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இ-பதிவு செய்யப்பட்ட ஆவணம் உள்ளதா என சோதனை செய்தனர். இ-பதிவு செய்யப்பட்ட ஆவணம் வைத்திருந்த வாகனங்களை மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதித்தார்கள். இதுபோல மாநகர பகுதியில் இ-பதிவு செய்யாமல் வாகனங்களில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு அபராதம் விதித்தும், அத்தியாவசிய மற்றும் அவசிய தேவைகள் இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரைகள் வழங்கியும் திருப்பி அனுப்பினார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify