திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மாநகர பகுதியில் உள்ள திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி நகரம் தொண்டர்கள் நயினார் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில், திருநெல்வேலி சந்திப்பு சொக்கநாதர் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில், குறிச்சி சொக்கநாதர் கோவில், சிந்துபூந்துறை சிவன் கோவில், செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆகியவற்றில் நேற்று பிரதோஷ கால வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாகத் திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருக்கோவில் ஊழியர்கள்மூலம்பிரதோஷ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.