திருநெல்வேலி எனும் புண்ணிய தலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. வற்றாத புண்ணிய நதியான தாமிரபரணியின் கரையில் அமையப்பெற்றுள்ளது. இந்த நகரின் மத்திய பகுதியில் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்தத் திருக்கோவில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்த பெருங்கோவிலாகும். இத்தலம் பற்றிய நூல்கள் பல உள்ளன. அவைகளில் தலபுராணங்களாக வேணுவன புராணமும், திருநெல்வேலித் தல புராணமும் படிக்க வேண்டிய முக்கிய நூல்களாகத் திகழ்கிறது. அவற்றுள் திருநெல்வேலியின் வரலாற்று வளமையை கூறும் திருநெல்வேலி தலப் புராணம் பற்றி இங்கு நாம் காண்போம். திருநெல்வேலி தலப் புராணத்தை முதன்முதலாக எழுதியவர் நெல்லையப்ப கவிராயர், வடமொழியில் இருந்த இப்புராணத்தை தமிழில் பாடல்களால் தொகுத்தவர். இவர் எழுதிய இப்புராணம், 1910 - ஆம் ஆண்டு அழகர்சாமி பிள்ளை என்பவரால் அனைவரும் படிக்கும் வகையில் அன்றைய எளிய தமிழில் வசன நடையாக வெளியிடப்பட்டது. இந்தத் திருநெல்வேலி தலப் புராணம் 6891 பாடல்களைக் கொண்டு, 120 சருக்கங்களாகக் கீழ்கண்டவாறு பாடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தலப் புராணத்தை உணர்ந்து படிக்கும் போது பழம்பெரும் புராணக் கதைகள், தாமிரபரணி கரையில் அமைந்துள்ள புண்ணிய நீர்த்துறைகள், அந்நீர்த்துறைகளில் அமைந்துள்ள திருக்கோவில்கள், பாண்டிய அரசர் வரலாறு எனப் பல்துறைச் செய்திகளை நயமுடன் அமைத்துத் தீந்தமிழில் தந்துள்ள மிகச் சிறந்த நூல் தான் இந்த "திருநெல்வேலித் தல புராணம்". இத்தகைய அரிய பொக்கிஷமாக திகழும் திருநெல்வேலி தல புராணத்தை ரத்தின சுருக்கமாக இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.