Logo of Tirunelveli Today

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள்!

July 3, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (05/07/2021) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாநிலங்களுக்குள் நடைமுறையில் உள்ள ஈ-பாஸ், ஈ-பதிவு முறை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், பேக்கரி கடைகள் மாற்று தேநீர் கடைகளில் 50% சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள் - யோகா பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

திருமண விழாக்களில் 50 நபர்களும், துக்க நிகழ்வுகளில் 20 நபர்களும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை இரவு 9.00 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகள் 50% வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அருங்காட்சியகங்கள், தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. பொழுதுப்போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் 50% நபர்களை கொண்டு செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. விடுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் தங்க அனுமதியளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி சமூக இடைவெளி பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் பொது இடங்களில் நடமாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify