Logo of Tirunelveli Today
English

இன்று சோமாசிமாற நாயனார் குருபூஜை.

வாசிப்பு நேரம்: 2 mins
No Comments
Golden statues of somasimaara nayanar and his wife.

இன்று வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் சோமாசிமாற நாயனார் குருபூஜை நடைபெற இருக்கிறது.

திருவாரூரை அடுத்துள்ள அம்பர் மாகாளம் என்ற ஊரில் சோமாசி நாயனார் என்னும் அந்தணர் தன் மனைவி சுசீலை உடன் வாழ்ந்து வந்தார். தினந்தோறும் சோமன் ஆகிய சிவனை குறித்து சோம யாகம் நடத்தி வழிபட்டு வந்தார். ஒருநாள் ஈசனின் தோழரான சுந்தரரிடம் சோமாசி மாற நாயனார், தான் நடத்தும் சோம யாகத்திற்கு சிவபெருமான் நேரில் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதை ஏற்ற சுந்தரரும் திருவாரூர் தியாகேசனிடம் சோமாசி நாயனாரின் ஆசை பற்றி முறையிட்டார்.

தியாகேசன் சுந்தரரிடம் நாளை நாம் யாகத்திற்கு எழுந்தருள்வோம். ஆனால் எந்த உருவத்தில் என்று கூற முடியாது, சோமாசி நாயனார் எம்மை சரியாக அடையாளம் கண்டு அவிர்பாகம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதை சுந்தரர் சோமாசி நாயனாரிடம் கூற மிக சிறப்பாக நடைபெற தொடங்கியது யாகம். தியாகேசப் பெருமான் தாழ்ந்த குலம் என்று கூறப்படும் புலையராக வேடங்கொண்டு, வேதம் நான்கையும் நாயாக மாற்றி, நந்தியை இறந்த கன்றாக மாற்றி தோளில் இட்டு, முண்டாசு கட்டிக்கொண்டு, கொட்டு ஏந்தி வர, உமையாகிய கமலாம்பிகையோ புலைச்சி வேடம் கொண்டு, கள் குடத்தினை தலையில் சுமந்து, விநாயகர் முருகன் ஆகியோரை சிறுவர்களாக்கி அழைத்து வருகிறாள்.

இவர்களை கண்ட அந்தணர்கள் எல்லாம்  பயந்து ஓட, சோமாசி நாயனாரும் அவர் மனைவியும் சரியாக இவர்களை அடையாளம் கண்டு வரவேற்று அவிர்பாகம் அளிக்க, தியாகராஜன் கமலாம்பாளோடு காட்சி தந்து சோமாசி நாயனாரை ஆட்கொண்டார். இந்த விழா இன்று அம்பர் மாகாளத்தில் சிறப்பாக நடைபெறும். இதனை முன்னிட்டு நெல்லை பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் இன்று சோமாசிமாற நாயனார் குரு பூஜை விழா நடைபெறும்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram