திருநெல்வேலி அருகே அமையப்பெற்றுள்ள ஆன்மீக சுற்றுலா தலம் கிருஷ்ணாபுரம். இங்குள்ள சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இங்குள்ள சிற்பங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இந்தத் திருக்கோவில் 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) நிலப்பரப்பில், நான்கு புறமும் கல் மதில் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் முதலில் மூன்று பிரகாரங்கள் இருந்ததாகவும், அவற்றில் வெளிப்புறம் உள்ள பிரகாரம் ஆற்காடு நவாபின் உத்தரவின் பேரில் சாந்தா சாஹிப்பால் இடிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இந்த இடிக்கப்பட்ட பிரகாரத்தின் கற்களையும், தூண்களையும் பயன்படுத்தி பாளயங்கோட்டையில் கோட்டை கட்டப்பட்டதாம். இந்தக் கோயிலின் நுழைவாயில் ஐந்து அடுக்கு ராஜகோபுரம் 110 அடி (34 மீ) உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. இங்குக் கருவறையில் 4 அடி (1.2 மீ) உயரத்தில் நன்கு கரங்களை கொண்டு நின்ற கோலத்தில் வெங்கடாசலபதி பெருமாள் காட்சிதருகிறார். இவர் திருப்பதி வெங்கடாசலபதி போன்ற உருவ அமைப்பில் காட்சித் தருகிறார். இவரது இரு புறமும் பக்கத்திற்கு ஒருவராக ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி தாயார்கள் காட்சித்தருகிறார்கள்.
திருக்கோவில் சிறப்புகள்:
இந்தக் கோவிலில் பந்தல் மண்டபம், வாகன மண்டபம், ரங்க மண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என ஏராளமான மண்டபங்கள் உள்ளன.
பந்தல் மண்டபத்தில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிகோலம் ஆகியவற்றைக் காண்பிக்கும் கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்த தூண்கள் உள்ளன.
இங்கு உற்சவ மூர்த்திகள் ஊஞ்சலில் எழுந்தருள ஏற்றவாறு உஞ்சல் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சதுர வடிவ வசந்த மண்டபம் நவரங் பாணியைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள வீரப்ப நாயக்க மண்டபம் அதன் நுழைவாயிலில் அழகாகச் செதுக்கப்பட்ட இரண்டு யானைகளைக் கொண்டுள்ளது.
இந்து புராணங்களின் பல்வேறு புராணக்கதைகளைக் குறிக்கும் சிற்பங்கள் இங்குள்ள தூண்களில் நேர்த்தியாக உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள் `புராண’ காட்சிகளை திறமையுடன் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கோயிலின் மற்றொரு தனித்துவமான அம்சம், தட்டும் போது சுவாரஸ்யமான ஒலியை உருவாக்கும் இசை தூண்கள் உள்ளன.
இங்குள்ள ஒரு சிற்பத்தில் உள்ள வில்லின் மேலிருந்து ஒரு ஊசியை விடும் போது, அது கீழே அடையும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது, அதன் சிறப்பு என்னவென்றால், வில் நேராக இல்லை, வளைந்திருக்கும். வில்லின் ஒரு பகுதி மட்டுமே காணப்படுவதால் இந்தக் கல் செதுக்கலும் சேதமடைந்துள்ளது.
இங்குள்ள நாங்குநேரி ஜீயர் மண்டபத்தில் கேரள கோவில்களில் உள்ளதைப் போல ஏராளமான விளக்குகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பண்டிகை காலங்களில் இந்த இடத்தில் தான் ஓய்வெடுப்பார்கள்.
இங்குள்ள மணிமண்டபத்தில் யானைகள் மற்றும் யாளிகளின் சிற்பங்களுடன் கூடிய ஏராளமான தூண்கள் உள்ளன.
இங்குள்ள ஒவ்வொரு சிற்பங்களும் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது, இதனை தட்டும்போது வெண்கல மணி ஒலியை உருவாக்குகிறது.
கிருஷ்ணபுரம் சிற்பங்கள் உலகளவில் பிரபலமானவை. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு கற்களும் பேசுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் அதிசயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
சிறந்த கட்டடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் இந்தக் கோவிலில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் 42 சிற்பங்கள் உள்ளன, மொத்தத்தில் இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொன்றும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் காணப்படுகின்றன.
வீரப்ப நாயக்கர் மண்டபத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிலைகளில் பொறிக்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் உடைகள் கூடப் பிரமாதமாகவும் அற்புதமாகவும் காணப்படுகின்றன.
மன்மதன் - ரதி சிற்பங்கள்:
இங்குக் காணப்படும் மன்மதன் மற்றும் ரதி சிற்பங்கள் காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் நேர் எதிராக உள்ள தூண்களில் காணப்படுகிறார்கள். ரதியின் கைகள் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன, அவளுடைய இடது மணிக்கட்டில் உள்ள நரம்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன, அந்த அளவுக்கு இந்தச் சிற்பம் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது. வாயில் வெத்தலை மெல்லும் வகையில் காணப்படும் ரதி தேவியின் சிற்பம் மிகவும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. ரதி தேவியின் வாயில் சுரக்கும் வெத்தலை எச்சிலை உமிழ்வதற்கு தேவைப்படக் கூடிய வகையில் அழகிய சிறு கிண்ணமும் அவள் அருகே செதுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு நேர் எதிராக அழகே உருவாக கையில் வில் மற்றும் கரும்பு பானம் ஏந்தியபடி மன்மதன் காட்சி தருகிறார். இவரது கால்களில் உள்ள நரம்புகள் கூட தெளிவாகத் தெரியும் படி செதுக்கப்பட்டுள்ளதை காணும் போது நமக்குள் ஒரு வகை சிலிர்ப்பு ஏற்படும்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Reddiarpatti Hill - 15 min (11.7 km)
- Mutharammal puram vallanadu - 18 min (11.5 km)
- Murappanadu Dam Thamirabharani river - 16 min (8.2 km)
- Namma Nellai Selfie Spot - 22 min (11.4 km)
- Suthamalli Check Dam சுத்தமல்லி தடுப்பணை - 47 min (28.9 km)
பீமன், வியாக்ர பாதர் மற்றும் தர்ம ராஜா சிற்பங்கள்:
ஒரே கல்லில் இருந்து வெளிப்படும் வகையில் பீமன், வியாக்ர பாதர் மற்றும் தர்ம ராஜா சிற்பங்கள் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் பீமனுக்கும், வியாக்ரபாதருக்கும் இடையிலான சண்டையைக் குறிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் தர்மராஜா அமைதியான தோற்றத்துடனும், பீமன் சற்றே திமிருடனும் கூடிய வகையிலும் காணப்படுகிறார்கள். மூன்று பேர்களையும் ஒரே தூண்களில் உள்ளடக்கிச் செதுக்கியுள்ள சுரப்பியின் திறமை இங்கு வெளிப்படுகிறது.
இலங்கை இணைப்பு:
இலங்கை ஆட்சியாளர்களுக்குப் பொதுவான மூன்று அடுக்கு கிரீடத்துடன் கூடிய அழகாக அலங்கரிக்கப்பட்ட ராணியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கோவில் ராமாயண காலத்திற்கு முன்பே இலங்கையுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சான்றாக எந்தத் தரவும் இதவுவரை கிடைக்கவில்லை.
வீரபத்திரர்:
இங்குக் காணப்படும் வீரபத்திரர் சிற்பத்தில் கால் நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது முறுக்கு மீசையும் துடிப்பாகத் தெரியும் வண்ணம் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவரது கண்கள் மேலிருந்து கீழே நிற்கும் நம்மை கூர்ந்து பார்ப்பது போல இருக்கும்.
ரம்பையின் அழகு:
இந்தக் கோவிலின் நுழைவாயிலில் வலது புறம் தேவலோக பெண்ணான ரம்பையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ரம்பையின் சிற்பம் நீண்ட கூர்மையான மூக்கு மற்றும் பெரிய காது வளையங்களுடன் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் முன் நின்று ரசிக்கும் ஒருவர் ரம்பையின் அழகை நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடியும்.
கர்ணனின் சிற்பம்:
இங்குக் காணப்படும் கர்ணன் முறுக்கிய மீசையுடனும், கையில் வில் ஏந்தியபடியும் இருக்கிறார். இந்த சிற்பத்தைப் பார்க்கும் போது ஒருவருக்கு துரியோதனன், கர்ணனுக்கு மகுடம் சூட்டிய நாட்கள் நியாபகத்துக்கு வரும். கர்ணனின் கால்களிலும், கரங்களிலும் காணப்படும் நரம்புகள் கூட புடைத்துக் கொண்டு தெரியும்படி இந்தச் சிற்பம் உயிரோட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் தவம்:
கர்ணன் சிற்பத்திற்கு அடுத்தபடியாக ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருக்கக் கூடிய அர்ஜுனன் சிற்பம் உள்ளது. தவம் செய்யும் அர்ஜுனன் நீண்ட தாடியுடன் காணப்படுகிறார். இந்த அர்ஜுனன் சிற்பத்தில் அவரது வலது கையில் காணப்படும் வெட்டப்படாத நீண்ட நகங்கள் அவர் பல்லாண்டு காலம் தவம் செய்வதை குறிக்கும் வண்ணம் உள்ளது. அந்த அளவுக்குச் சிற்பிகள் நயமாக யோசித்து நீண்ட நகங்கள் மற்றும் தாடியுடன் கூடிய அர்ஜுனனை செதுக்கியுள்ளார்கள்.
ஒரே சிற்பத்தில் காணப்படும் யானை மற்றும் பசு:
இங்குக் காணப்படும் மற்றோரு கலையம்சம் பொருந்திய சிற்பம் ஒரே கல்லில் காணப்படும் யானை மற்றும் பசுவின் சிற்பம். இந்தச் சிற்பத்தை இடது பக்கம் நின்று பார்க்கும் போது யானை அதன் தந்தத்தை தூக்கி பார்ப்பது போலவும், வலது பக்கம் நின்று பார்க்கும் போது அதே சிற்பம் ஒரு பசுவைப் போலவும் தெரியும் வகையில் மிக உன்னதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ராஜாவின் தோளில் ராணியின் சிற்பம்:
ஒரு ராஜா தனது எதிரிகளை எதிர்த்துப் போராடும் போது தனது ராணியைத் தோளில் தூக்குகிறார். அவரது ராணியின் எடை காரணமாக ஏற்படும் ராஜாவின் வலது கையில் நீட்டிய தசைகளையும், விரிவடையும் விலா எலும்புகளையும் காட்டும் வகையிலும், ராஜாவின் தோளில் உள்ள ராணியின் சேலையின் ஒரு பகுதியை வீசும் தென்றல் காற்று அவளுடைய தலைக்கு மேலே தூக்கும் வண்ணமும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட இளவரசனைக் காப்பாற்றும் மன்னர்:
இந்தக் கோவிலில் காணப்படும் சிற்பங்களுள் மற்றொரு குறிப்பிடத் தக்க சிற்பம் என்னவென்றால், கடத்தப்பட்ட இளவரசனைத் திரும்பப் பெற குதிரையின் மீது துரத்துகிற ஒரு ராஜாவின் சிற்பம். போர்க்களத்தில், கோபமான குதிரை அதன் முன் கால்களால் தரையில் இருந்து முன்னேறி, காற்றில் உயரமாக முன்னேறுவதை போலவும். இதனை சற்றே பார்வையிடாத மன்னர் கடத்தல்காரனின் கவனத்தை ஈர்க்க தனது வலது பக்கம் நகர்வதைப் போலவும் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தைக் காணும் அனைவரின் கண்களும் வியப்பில் விரிவடையும் என்பதில் ஐயம் இல்லை.
பிற சிற்பங்கள்:
தோளில் கிளி வைத்திருக்கும் பெண், தோளில் குரங்குடன் காணப்படும் ஒரு பிச்சைக்காரன் ஆகிய இருவரும் மிகவும் கலகலப்பாக இருக்கும் வண்ணம் இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் இரண்டு காதலர்கள் காதல் செய்யும் சிற்பமும், மற்றொரு தூணில் நடனமாடும் நாட்டிய பெண்ணின் சிற்பமும், மற்றொரு தூணில் அங்கு ஒரு பெண் தன்னைத் துன்புறுத்த முயற்சிக்கும் ஒரு முனிவரின் தாடியை பிடித்து இழுக்கும் சிற்பமும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உயிரோட்டமாக அமையப்பெற்றுள்ளது. இந்தச் சிற்பங்களின் அழகை ரசிக்கவே இங்குப் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அந்த அளவுக்கு இங்குள்ள சிற்பங்கள் பிரசித்தி பெற்றவையாக விளங்குகிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- Sree Bharani Hotels - 3-star hotel
- Hotel Palmyra Grand Inn - Tirunelveli - 3-star hotel
- Hotel Applettree - 3-star hotel
- HOTEL ARYAAS - 3-star hotel
- SRI RAM HOTEL
திருக்கோவில் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
இந்தக் கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில், 1975 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இடையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அதற்க்கு பின்னர் இந்தக் கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட்டு நிர்வாகம் செய்து வரப்படுகிறது.
இந்தக் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருப்பது அதன் மத முக்கியத்துவம் காரணமாக மட்டும் அல்ல, ஆனால் அதன் வாழ்க்கை அளவிலான அழகான சிற்பங்கள் மற்றும் உருவங்கள் காரணமாக என்று தான் சொல்ல வேண்டும். சிற்பங்களின் அழகைப் பொறுத்தவரை, கிருஷ்ணபுரம் கோயில் தமிழ்நாடு கோயில்களில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதை விளக்கும் வகையில் ஒரு கல்வெட்டு உள்ளது. மேலும் இங்கு 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஐந்து செப்புத் தகடுகள் கோயிலுக்கு வழங்கப்பட்ட பல்வேறு மானியங்களைக் குறிக்கின்றன.
மதுரை நாயக்கர் வம்சத்தின் நிறுவனர் விஸ்வநாத நாயக்கரின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் (1563–72) என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது கல்வெட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளப்படுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள வளாகங்கள் மற்றும் உயர்ந்து நிற்கும் கோயில் கோபுரம் ஆகியவை கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
இந்தக் கோவிலின் தேர் சீராகக் கடந்து செல்வதற்காகக் கிருஷ்ணப்ப நாயக்கர் கோயிலைச் சுற்றி நான்கு தெருக்களை அழகாக அமைத்தார். அரியகுளம், கொடிக்குளம், குத்துக்காவல், புத்தனேரி, பொட்டுக்குளம், ஸ்ரீராமகுளம், ஆழிக்குடி ஆகிய கிராமங்கள் தினசரி பூஜைகளின் செயல்திறனுக்காகக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. வேதங்கள் மற்றும் அகமங்களை நன்கு அறிந்த 108 பிராமண குடும்பங்களுக்கு வீட்டுவசதி கொண்ட ஒரு அக்ரஹாரம் நிறுவப்பட்டது.
கோயிலில் அவர் செய்த பணிகள் பற்றிய விரிவான விவரங்கள் குமாரசாமி அவதானியர் எழுதிய திவாச்சில்லையார் விடு தூது மற்றும் கால்டுவெல் எழுதிய டின்னெவெல்லி வரலாற்றிலும் புகழப்பட்டுள்ளன. இந்தக் கிராமத்திற்கு முதலில் திருவெங்கடபுரம் என்று பெயரிடப்பட்டது மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கின் ஆட்சியின் போது கிருஷ்ணாபுரம் என்று மாற்றப்பட்டதாகத் தகவல் உள்ளது.
இந்தக் கோயில் முதலில் திருநெல்வேலியில் உள்ள ராமசாமி கோயிலின் துணைக் கோயிலாக நிர்வகிக்கப்பட்டது. அதன் பின்னர் 1973 முதல் நெல்லையப்பர் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இது 1986 முதல் திருச்செந்தூர் தேவஸ்தானத்தின் ஆதிக்கத்தின் கீழ் மாற்றப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலின் வெளிப்புற தோற்றத்தைக் காணும் பொது மிகவும் எளிதாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையான பிரம்மாண்டம் கோவிலுக்கு உள்ளே காணப்படும் சிற்பங்களில் தான் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன், கோவில் கருவறைக்குச் செல்லும் பிரதான மண்டபம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சுவர்களின் தூண்கள் அற்புதமான கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளன. கோயிலில் உள்ள இந்த அற்புதமான சிற்பங்களின் தனித்துவமானது என்னவென்றால், அதன் சுத்த அளவு. இந்தச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரியவை, கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அளவு. இது இந்தச் சிற்பங்களில் சிறந்த பெருமையைச் சேர்க்கிறது. உண்மையில், தூணின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தனித்துவமான சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் நீங்கள் மூழ்கி இருக்கும் போது, இந்தச் சிற்பங்களில் எத்தனை பேர் பணியாற்றியிருக்க வேண்டும், இந்தப் பயிற்சி எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என்று நாம் ஒவ்வொரும் நிச்சயம் ஆச்சரியம் அடைவோம்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில். இங்கு செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, ஆத்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்திலும், திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜம்புதூர் செல்லும் நகர பேருந்திலும், பயணித்துச் செல்லலாம்.