Logo of Tirunelveli Today
English

சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

வாசிப்பு நேரம்: 5 mins
No Comments
School children dressed in smart uniforms standing in many rows in a school assembly

குழந்தைகளின் கல்விக்காக சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலானதாக இருக்கும். பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது பெற்றோர்கள் பல விஷயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும், ஏனெனில் இது அவர்களின் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாகும்.

இந்தியாவில் சி.பி.எஸ்.இ மிகவும் பிரபலமான பாடத்திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது நாடு முழுவதும் கல்விக்கான முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. பல்வேறு காரணங்களுக்காக பெற்றோர்கள் மற்ற கல்வி முறைகளை விட சி.பி.எஸ்.இ வாரியத்தை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ஒரு சி.பி.எஸ்.இ பள்ளி உங்கள் குழந்தையின் திறன்களையும், திறமைகளையும் முழுமையாக வளர்க்குமா என்று எப்படி சொல்ல முடியும்? உங்கள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவது அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நீங்கள் எப்படி நம்ப முடியும்?

உங்கள் குழந்தைக்கான சிறந்த ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியைத்(best CBSE schools in Chennai) தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கு நாம் காணலாம்:

1. அங்கீகாரம்:

நீங்கள் உங்கள் குழந்தையின் கல்விக்காக சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் போது, சி.பி.எஸ்.இ பள்ளியின் அங்கீகாரம் மற்றும் பாடத்திட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமான காரணிகள் ஆகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளி NCERT அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் அதே பாடத்திட்டத்தைப் பின்பற்றுவது முக்கியம். இது இறுதி முடிவை எடுப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

2. இணை பாடத்திட்ட செயல்பாடுகள்:

ஒரு குழந்தை தனது முழு நேரத்தையும் படிப்பிலேயே செலவழித்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடுவது குழந்தைகளை உடலளவிலும் மனதளவிலும் சுறுசுறுப்பாகச் செய்யும். சி.பி.எஸ்.இ பள்ளிகள் பல இணை பாடத்திட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது, இது குழந்தைகளுக்கு பள்ளி வாழ்க்கையை எளிதாக்குகிறது. பல சி.பி.எஸ்.இ பள்ளிகளின் பாடத்திட்டமானது கல்வி ஈடுபாடுகள், நடப்பு நிகழ்வுகள், அனுபவ கற்றல், உல்லாசப் பயணங்கள், சர்வதேச ஈடுபாடுகள், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள், போட்டித் தேர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில்நுட்பம், சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள், மற்றும் பள்ளிகளுக்கு இடையேயான விழாக்கள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. எனவே இணை பாடத்திட்ட செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை தேர்ந்தெக்க வேண்டும்.

3. உள்கட்டமைப்பு:

மேம்பட்ட மற்றும் நன்கு பொருத்தப்பட்ட உள்கட்டமைப்பு மிகவும் அவசியம். சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிகள், சிறந்த நிர்வாகத்துடன் கூடுதலாக நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், நூலகம், வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் ஆடிட்டோரியம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். இது ஒரு சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது குழந்தைகளை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான முறையில் கற்றுக்கொள்ள உதவுகிறது.

Students dressed in checked uniforms listening to a teacher in a classroom with blue and green furniture, and a pinboard at the walls behind the furniture.

4. சிறந்த பள்ளி தலைமை:

மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் முக்கிய காரணிகளில் பள்ளி தலைமைத்துவமும் ஒன்று. இது உண்மையில் ஆசிரியர்களின் தரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கள் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலையும், வாய்ப்புகளையும் வழங்குவதில் பள்ளியின் நிர்வாகிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது. ஏனென்றால் மாணவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை வளர்க்கும் திட்டங்களை உருவாக்குதல், பட்ஜெட் தயாரித்தல், முறையாக திட்டமிடுதல் மற்றும் பள்ளிக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துதல் போன்றவற்றில் தலைமை பதவியில் உள்ளவர்கள் தான் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.

5. திறமையான ஆசிரியர்கள்:

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் அறிவாற்றலை பெருக்குவதில் சக்திவாய்ந்த ஆதாரமாக இருக்கிறார். மேலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறார். சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிகள் தொழில்முறை மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும். பல சி.பி.எஸ்.இ பள்ளிகளின் ஆசிரியர்கள் நோய்த்தொற்று பரவலின் போது கூட குழந்தைகளுக்கு திறமையாக கற்பிக்க தங்களை முழுவதுமாக அர்பணித்தனர். இதனால் ஓன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி அறிவை திறம்பட வளர்த்துக் கொண்டனர்.

நோய்த்தொற்று காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்த போதிலும், ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையையும், பெற்றோரையும் தொடர்பு கொள்வதில் பொறுப்பெடுத்துக் கொண்டனர். வாராந்திர மதிப்பீடுகள், செமஸ்டர் தேர்வுகள், பள்ளிகளுக்கு இடையேயான நிகழ்வுகள், தொழில் மற்றும் மனநலப் பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும் சிரத்தை எடுத்து கவனித்துக் கொண்டனர்.

6. பாடங்களின் விருப்பங்கள்:

சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தேர்வு செய்ய பல பாடங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கான சி.பி.எஸ்.இ பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது அங்குள்ள பாடங்களின் விருப்பங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான பாடத்திட்ட வாய்ப்புகள் இருக்கும். மேலும் பல்வேறு மொழிகளில் பாடங்களை பயிலும் வாய்ப்புகளும் இருக்கும். பெற்றோர்கள் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

7. மாணவர்-ஆசிரியர் விகிதம்:

ஒரு நல்ல சி.பி.எஸ்.இ பள்ளியில் சிறந்த மாணவர் - ஆசிரியர் விகிதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தைப் பெற முடியாவிட்டாலும், சிறிய வகுப்பு அளவைக் கொண்டிருப்பது ஒரு ஆசிரியரை அனைத்து மாணவர்களிடமும் சமமாக கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ஆசிரியர் - மாணவர் விகிதம் சரியான முறையில் இருக்கும் போது ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்களின் தனி கவனத்தை பெற்று தங்கள் கல்வி அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்.

ஒரு நல்ல சி.பி.எஸ்.இ பள்ளியைத் (CBSE affiliated schools in Chennai) தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெற்றோரின் கைகளில் தான் உள்ளது. ஏனென்றால் குழந்தைகளால் சிறு வயதில் இந்த முடிவை எடுக்க முடியாது. எனவே பெற்றோர்கள் மேற்கண்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் கல்வி பயில ஏற்ற பள்ளியை தேர்ந்தெடுக்கலாம்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram