Logo of Tirunelveli Today
English

பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா

Palayamkottai Rajagopala swamy with Thayar decked up for Brahmorchavam and a flag has been hoisted on the flagstaff by the priests marking the beginning the festivity.

பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ அழகியமன்னார், ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ வேதநாராயணர் திருக்கோவில். இங்கு அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் இரண்டு தளங்களில் காட்சித் தருகிறார். விமானத்தின் முதல் தளத்தில் (திருக்கோவில் மாடியில்) ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ அழகியமன்னார் நின்ற கோலத்தில் வர்ணகலாபத் திருமேனியாகக் காட்சி தருகிறார். இரண்டாம் தளத்தில் (திருக்கோவில் கருவறையில்) ஸ்ரீ வேதவல்லி, ஸ்ரீ குமுதவல்லி உடனுறை ஸ்ரீ வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் கருவறை மூலவராகக் காட்சி தருகிறார். இவருடன் கருவறையில் இரண்டு வெண்சாமரம் வீசும் கன்னியர்களும், இரண்டு மகரிஷிகளும் இருக்கின்றனர். நான்கு வேதங்களும் இங்குப் பெருமாளை வழிபட்டதால் இங்குப் பெருமாள் வேதநாராயணர் என்ற திருநாமம் தாங்கிப் பெருமாள் காட்சி தருகிறார். இந்தக் கோவிலின் உற்சவ மூர்த்தி ஸ்ரீ சத்யபாமா, ஸ்ரீ ருக்மணி உடனுறை ஸ்ரீ ராஜகோபாலசுவாமி இந்திரலோகத்திலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் தனது முகத்தில் வடுக்களோடு காட்சிதருகிறார். இவர் மிகவும் தொன்மை வாய்ந்த மூர்த்தி ஆகும். இதனை நாம் அவரைத் தரிசிக்கும்போதே கண்டு உணரலாம். இந்தத் திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது.

பாளையங்கோட்டை வாழும் மக்களால் "கோவாலங் கோவில்" என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ அழகியமன்னார், ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ வேதநாராயணர் திருக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவமான பங்குனி திருவிழா வரும் பங்குனி மாதம் 7 (20/03/2021) ஆம் தேதி தொடங்கி, பங்குனி மாதம் 16 (29/03/2021) ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நடைபெறும் நிகழ்வுகள்பற்றி இங்கு நாம் காணலாம்.

பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:

முதலாம் திருநாள்: பங்குனி - 7 (20/03/2021)

  • காலை: திருக்கோவில் கொடிமரத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.
  • இரவு: ஸ்ரீ சத்யபாமா, ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ ராஜகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீ அழகிய மன்னார் இரட்டை தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

இரண்டாம் திருநாள்: பங்குனி - 8 (21/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளி திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உலா வருதல்.

மூன்றாம் திருநாள்: பங்குனி - 9 (22/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி அனுமார் வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

நான்காம் திருநாள்: பங்குனி - 10 (23/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

ஐந்தாம் திருநாள்: பங்குனி - 10 (23/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: இரட்டை கருட சேவை.
  • ஸ்ரீ ராஜகோபாலசுவாமி - கருட வாகனத்திலும், ஸ்ரீ அழகியமன்னார் - கருட வாகனத்திலும் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

ஆறாம் திருநாள்: பங்குனி - 11 (24/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

ஏழாம் திருநாள்: பங்குனி - 12 (25/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வந்து மேல மாட வீதி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் சேர்ந்து திருமஞ்சனம் கண்டருளல்.
  • மாலை : ஸ்ரீ ராஜகோபாலசுவாமி இந்திர விமானத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி புன்னைமர வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

எட்டாம் திருநாள்: பங்குனி - 13 (26/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

ஒன்பதாம் திருநாள்: பங்குனி - 14 (27/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

பத்தாம் திருநாள்: பங்குனி - 15 (28/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி பங்குனி உத்திரம் தேரோட்டம் திருவிழா.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி., தவழும் கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

பதினோராம் திருநாள்: பங்குனி - 16 (29/03/2021)

  • காலை: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சப்பரத்தில் புறப்பட்டுத் தீர்த்தவாரிக்கு செல்லுதல்.
  • நண்பகல்: வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதியில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி தீர்த்தவாரி கண்டருளல்.
  • இரவு: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ அழகியமன்னார் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளித் திருவீதிகளில் உலா வருதல்.

பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்குபெற்றுத் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தற்போது பழைய தேர் சிதிலம் அடைந்துள்ளதால், புதிய தேர் திருப்பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வரும் ஆண்டுகளில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி புதிய தேரில் எழுந்தருளிப் பாளையங்கோட்டை நகர வீதிகளில் உலா வருவார்....!!

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram