Logo of Tirunelveli Today

நெல்லையில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது!

June 21, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரை பொறுத்தவரை ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகப்படியான வாகனங்கள் சாலைகளில் உலா வருகின்றன. அதில் இ-பதிவு செய்யாத இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் உலா வருகின்றன. இதனை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்,    நேற்று மாநகர பகுதிகளில் வாகனங்களில் அனுமதி பெறாமல் சென்றவர்களையும், அத்தியாவசிய தேவையின்றி சுற்றியவர்களையும் போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.

மேலும் மாநகரில் வண்ணார்பேட்டை, சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் அனுமதி பெறாமலும், அத்தியாவசிய தேவையின்றியும் பயணம் செய்த சுமார் 50-க்கும் மேற்பட்டோரை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify