Logo of Tirunelveli Today

நெல்லை மாநகரில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நேற்று கடைகள் திறக்கப்பட்டன!

June 8, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நெல்லை மாநகரில் உள்ள அனைத்து கடைகள் , வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள்  என அனைத்தும்  மூடப்பட்டன.

இந்நிலையில் தற்போது  நெல்லை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறையத் தொடங்கிய நிலையில் அந்த மாவட்டங்களில் ஊரடங்கில்  சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த தளர்வுகளின் படி நெல்லை மாநகரில் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை அத்தியாவசிய தேவைகுள், மற்றும் முக்கிய தேவைகளை வழங்கும் கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நேற்று காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  காய்கறி சந்தைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள் , இறைச்சிக் கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன. மேலும் கொரோனா நோய்த்தொற்று குறையும் பட்சத்தில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify