Logo of Tirunelveli Today

கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் நேற்று முதல் முறையாகச் சரக்குகள் வந்து இறங்கியது...!

May 5, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பல ரயில்கள் தோலை தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாகச் சென்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் விதமாக மேற்கு பகுதியில் சரக்கு இறங்கு தளமும் செயல்பட்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை, உரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இந்தச் சரக்கு இறங்கு தளத்தில் இறக்கப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் தேவையான இடங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படும். தற்போது ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் வந்து செல்வதால், நாளுக்கு நாள் பெருகி வரும் பயணிகள் கூட்டத்தாலும் திருநெல்வேலி ரயில் நிலையம் நெருக்கடி மிகுந்து காணப்பட்டது. இதன் காரணமாக திருநெல்வேலி மாநகரின் புறநகர் பகுதியில் உள்ள கங்கைகொண்டான் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டதுடன் அங்குப் புதிய சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது.  இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சரக்கு இறங்கு தளத்தில் நேற்று முதல் முறையாக வட மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் நேற்று முதல் கங்கைகொண்டான் சரக்கு இறங்கு தளம் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify